visits - with gratitudes

Saturday, February 2, 2013

WEEEND MUSINGS - 2013 - 1 FEB 2013




ஞானி என்பவர் யார் - கேட்ட கதை -  சிந்திக்க வைத்தது

எல்லோர் மனம் கேட்கும் கேள்வி ஒன்று என்னையும் வந்து அடைந்தது. அது இதே .. ஞானி என்பவர் யார் .. எப்படி கண்டு கொள்க முடியும்.. ஏன் என்றால் அவர் பாதை நம் முன்னோடியாக ஆக உதவும் அல்லவா? 

ஒரு ஊரில் ஒரு மடம். அதன் குரு, சீடர்கள் இடையே நல் எண்ணங்களை விதைத்து கொண்டிருத்தார்.  சீடர்கள் சந்தேகம்.. எனவே, அவர்கள் குருவை பரிசோதனை செய்ய துணிந்தனர். 

குரு நதிக்கரையில் சூரிய கதிரையும், மாலை நேர காட்சிகளையும் தனிமையிலே ரசித்து  கொண்டிருத்தார். சீடர்கள் அவர் அருகே சென்று வெடி விட்டனர். வெடி சத்தம் கேட்டு அவர் பயந்து போவார் என்பது அவர்கள் எண்ணம். குருவோ ரசிப்பதில் மும்முரமாக இருந்தார். அவருக்கு என்ன நடந்தது என்பதே தெரியலை. 

சீடர்கள் சென்று குருவிடம் வினவினர். குரு புன்சிரிப்புடன் சீடர்களை பார்த்து கூறினார். "ஆஹா .. உங்களை நான் ஏமாத்தி விட்டேன் போலும்..உங்கள் எண்ணம் நிறைய வில்லையே.. இப்பொழுது வேண்டும் என்றல் திரும்பவும் வெடி விடுங்கள்.. நான் பயப்படுகிறேன்.. கோபப்படுகிறேன் " என்றார்.. 

சீடர்கள் தலை குனிந்தனர்.. குருவின் அளவு கடந்த மன நிம்மதியும், மன அமைதியும் கண்டு பூரித்தனர்.

ஞானி என்பவர் யார்.. நாம் யோசிப்போம்.. நம்முள் உள்ள ஞானியை கண்டு அறிவோம்..

நல்லதே நடக்கும்
நன்றே புரிவோம்
நாளும் கற்போம்
நாலும் காண்போம்..