என் மனம் மகிழ்ந்த, கவர்ந்த, நினைவுகள்,
இதோ உங்கள் பார்வைக்கு!!
கரம் குவித்தோம், இனி காலை விடோமடி,
கருணையுடன் அணைப்பாய் !!!
கருணையுடன் அணைப்பாய் !!!
இந்த வாசகம் - பக்தி பூர்வகமான அணுகுமுறையே சரி
என்று பல மனம் நினைக்க தூண்டுகிறது.....சர்வேஸ்வரி !! உன் பார்வை ஒன்றே என்
குறிக்கோள். நீயே என் வாழ்வின் ஆதாரம்.. இந்த அடிப்படையில், உன்னை வணங்கி, உன்
அருளை நோக்கி இருக்கும் சிறுவன் நான்!! இது தான், பக்தி மார்கத்தில், உதயமாகும்
சிந்தனைகள்..இதில் ஒன்றும், சந்தேகம் இல்லையே?
ஞான
சிந்தனையில், என் நிலைப்பாடு என்ன? இரண்டு கைகள், நான்கானால், என்ன ஒரு கொண்டாட்டம்.. கரங்கள் குவிப்பது
இதையே குறிக்கும். இப்படி குவிந்து எழுவோம். நினைத்த மார்கத்தில் பாதை கொள்வோம். காலை, மனம் போன
போக்கில் விடாமல், குறிக்கோள் நோக்கி போவோம். நம் நண்பர்கள், உற்றார் உறவினர்கள், ஒரு
மனதுடன், அன்பும், பண்பும் கலந்து செல்வோம்.
கர்ம
சிந்தனையில், உள்ள நோக்கம் இதோ. நம் செயல்பாடுகளில் கண்ணும், கருத்துமாகி நம் கரத்தினை
வலுப் படுத்துவோம். இதன் வாயிலாகி, நாம் நம் குறிக்கோள் நோக்கி செல்வோம். இதன் பிறகு, வரும்
வெற்றி தோல்வியை உன் பிரசாதமாக நினைத்து உட்கொள்வோம்.
என் இனிய தோழா! தோழி ! எந்த நிலைபாட்டை
நீங்கள் காண்பீர்கள்..உங்கள் சந்தோஷம்.. எதுவாகிலும், எல்லாம் வல்ல இறைவனின் அருள்
நம் மேல் பரிபூரணமாக இருக்க வேண்டி ...
நல்லதே நடக்கும்
நன்றே புரிவோம்
நாளும் கற்போம்
நாலும் காண்போம்..
கணேசன்
12 டிசம்பர், 2012
No comments:
Post a Comment
value your views