தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - இதயத்தில் தோன்றும் பல் துளிகள் - கிறுக்கல் 2
புதியதோர் உலகம் செய்வோம் - பாரதி கண்ட கனவு !
இருப்பதோர் உலகம் எண்ணியே - கண்டான் அவன் உணர்வு !!
சார்ந்து
வாழும் உலகம் - சேர்ந்து வாழுவது எப்பொழுது ?
பார்த்து
வாழும் உலகம் - பாராது வாழுவது எப்பொழுது ??
மின்சாரம் இல்லா உலகில் - முக்கிய சாதனம் இல்லை அன்று !
பல சாகசம் நடத்தும் உலகில் - முக்கிய சாரம் இல்லை(யோ) இன்று !!
பாரதி பாடினான் பாட்டு - கூடினோம் நாம் அன்று - கேட்டதே !
மனம் படும் பாடு - மனிதன் பாடும் பாட்டு - கேட்கிறதா இன்று ?
கூடி வாழ்ந்தோம் - கோடி நன்மை - கிட்டுது என நம்பி - அன்று !
கோடி வந்தாலும் - கூடி வாழ்வா - கேட்கிறோம் நம்பாது - இன்று ?
மன குழப்பம் நீங்கியது - மனதில் சாந்தி நிலவுது - நாளை !!
மனதில் நிலை நிறுத்தி - நம்பிக்கை சார்ந்து சேர்த்து - இன்று !!
திடீர் உதயம் - ஏன் என்றேன் - இளம் தலைமுறை மனதில் நினைத்து
ஐயம் அல்ல - ஜெயமே என்றேன் - தலைமுறை மானத்தை நிலை நாட்டுது !!
இன்றே புதிய வருடம் - இன்றே புதிய உணர்வு - நம் நாளை நம் கையில்
இறைவனை வேண்டுவேன் - நீங்களும் நாங்களும் - மனதில் உறுதி வேண்டி !!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
- இனியொரு முறையில் - நம்பி வாழும்
சாத்விக் - நளினி - கணேசன்
(ரவி)
மனதில் உறுதி தரும் நாகூர் ஹனிபாவின் வரிகளை கேட்டபின் உதயம்
இறைவனிடம் கை ஏந்துங்கள் - அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள் - அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
No comments:
Post a Comment
value your views