இறைவா ஏன் இந்த மௌனம் ?! –
பொங்கலோ பொங்கல்
இறைவா ஏன் இந்த மௌனம்
இறைவா ஏன் இந்த சாகசம்
இறைவா ஏன் இந்த தாமதம்
இறைவா ஏன் இந்த தர்க்கம் ?!
பூமாலையின் அழகை உணரா மூடர்கள்
பூலோகத்தில் இன்றும் உள்ளார் மூர்க்கர்கள்
ஆசையின் உச்சியில் புகுந்தனர் ஒரு நாள்
ஆவேசத்தில் உயிரினை பறித்தனர் பல பல !!
ஒன்றல்ல இரண்டல்ல அடுக்கலாம் பட்டியலில்
மும்பையா தில்லியா கூறுவேன் எதுவென்று
ஓர் உயிரினை பறிக்கும் உரிமையை
மற்றும் ஓர் உயிருக்கு என்று அளித்தாய் இறைவா ?!
சத்தியத்தின் உண்மையை அறியா மானிடன்
ஆசையின் உச்சியில் ஆதிக்கம் செலுத்தினான் நேற்று
எத்துனை ஊமைகள் விழிகளை சிமிட்டுகின்றன இன்று
சத்தியத்தை புகுட்ட ஏன் மறந்தாய் இறைவா அன்று ?!
பாரதி கண்ட கணவு இல்லை மனதில் இன்று
நல்லதோர் உலகம் செய்வோம் என்றான்
பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு மகிழ்ந்தான்
பாடி கொண்டாடும் தருணம் என்று தருவாய் இறைவா ?!
பொலம்பும் தருணம் பொலிக்குது புது உணர்வு
எங்கே அந்த உணர்வின்மை என்றேன்
பொலம்பும் தருணம் பொறிக்குது புது அறிவு
விரலின் திசையை திருப்பும் நாள் இதுவன்றோ !!
பொங்கலோ பொங்கல் கூவுகிறோம் இன்று
போங்கடா போங்க என்றும் கூறுவோம் இன்று
நற்செடிக்கு எதிரி எதுவன்று அறிந்து நன்று
நற்சமுதாயம் அமைப்போம் பாரதியின் கணவறிந்து நன்று !!
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உன்னை
நீயா மௌனி - இல்லையே என்றும்
கேட்க மறுக்கும் சிறுவன் நான்
கான்பதில் உண்மையை அறியா சிறுவனும் நானே !!
உன் ராகமோ மௌன ராகம்
உன் ராகங்களோ அபூர்வ ராகங்கள்
பாலைவன சோலையில் இருந்த நான்
தசாவதாரம் கண்டு மகிழ்ந்த பருவத்தில் நான் !!
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
மௌனியை அறிவோம் நம் மானத்தை காப்போம்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
கீதையின் கானத்தில் கவிதையை காண்போம் !!
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
கரும்பும் இனிக்கட்டும் கவி மனதும் மலரட்டும்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
காணும் எல்லாம் இனிக்கட்டும் கரும்பின் நுனி போல !!
வாழ்க வளமுடன் - அன்பான நெஞ்சங்களுக்கு சமர்ப்பணம் -
கணேசன் - நளினி – சாத்விக்
=============================================================
No comments:
Post a Comment
value your views