visits - with gratitudes

Saturday, November 17, 2012

WEEKEND MUSINGS - DIWALI WEEK 2012



ந்த வாரம் தீபாவளி வாரம். மிகவும் நல்ல விதமாகவே கொண்டாடினோம் என்று தான் கூற வேண்டும்.

நீங்கள் கேட்கலாம். அல்லது நினைக்கலாம். அல்லது மனதுக்குள்ளே புன்சிரிப்பு கூட இருக்கலாம். என்னடா இவன் நல்ல விதம் என்று கூறுகிறான். அப்படி என்றால் என்ன?  நிறைய வெடி விட்டுருப்பன். நிறைய பலகாரங்கள் உள்ளே போயிருக்கும் போலும்...

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது முழுதாக உண்மை அல்ல..பல காரங்கள் உண்டது உண்மையே ! மனைவி கை பக்குவம் கேட்கவா வேண்டும்?

ஆனால், நல்ல விதம் என்றும் நான் கூறிய உள் அர்த்தம் என்ன? 

இப்பண்டிகை நேரத்தில், நான் என்றும் செய்யும் ஒரு முக்கிய நிகழ்வு என்ன? இது, கடந்த 7-8 வருடங்களாக நடக்கும் நிகழ்வு..மின் அஞ்சல் வாயிலாக, என் வாழ்க்கை நண்பர்கள், உற்றார் உறவினர் கூட தொடர் கொள்வது.. எல்லோருக்கும் என் மனதில் வரும்  மாற்றங்கள், உதயங்கள் - கவிதை என்று நினைத்து கிறுக்குவது. இவ்வாண்டும் இதுவே!! மாற்றம் ஏதும் அல்ல..

ஒவ்வொரு முறையும், நூறுக்கு மேலே அன்பர்கள் பதில் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். ஆண்டுக்கு ஆண்டுக்கு இதில் முன்னேற்றம் ஏற்பது ஒன்றே மிக பெரிய மாற்றம். முதன் முதலில், நான் எழுத ஆரம்பித்த கால கட்டம். பல பல பதில் வரும். ஆனால் அதில் என் எழுத்துக்களை பற்றி போற்றியோ, தூற்றியோ ஒன்றும் வராது. நான் நினைப்பேன் ஏன் என்று. சில சமயம் சோர்வு அடைந்து  போவேன். ஏன் நான் அவ்வளவு மோசமாகவா எழுதினேன் என்று. பின் ஆராய்ந்து அறிந்த உண்மை இதுவே. எல்லோறுக்கும் தெரியாது அந்த எழுத்துக்கள் என் மனக்கோட்டை கதவை திறந்து வருகுது என்று. 

பின் நான் எல்லோருக்கும் கூற ஆரம்பித்தேன். எப்படி? சிரிக்காதீர்கள்!! இப்படி தான்..
"பி.கு. இது ஒரு சொந்த சரக்கு - forward அல்ல என்பதை அன்புடன் தெரிவிக்கிறோம் .."
முதலில் சற்று கூச்சமாகவே இருந்த போதிலும், இது பழக்க பட்டு விட்டதே..இதில் தவறு ஒன்றும் இல்லையே - என் மனம் அதிகாரம் கொடுத்த தைரியம். 

பதில் வாழ்த்துக்கள் சில உங்கள் பார்வைக்கு.. இங்கே சமர்ப்பிக்கிறேன் ..
மிக்க நன்றி என் நல் நெஞ்சம் கொண்ட வீர தோழ தோழிகளுக்கு.. நீங்கள் இல்லாமல் நான் இல்லையே..தீபாவளி நல வாழ்த்துக்கள் 

·         Could you please send translation of the Tamil Poem that you have attached, I am interested to know more. 
·         Thank you. Nice flow of tamil
·         Thank you for the poem. However I need the translated one. I know its an amazing poem coz its ur creativity.
·         Amazing that you still have the ability to write such wonderful poems   !!!  Hats off to you !!!!
·         Thank you so much for the lovely greetings and wishes.
·         Thanks a lot for the wishes in your customary style.  I wish I could play with Tamil words like you to reply in style so that you could enjoy it the same way as we do with your poem.
·         Thank you for your kavithai
·         Wish you all a Happy and Prosperous Deepavali.
I took this line
அன்பும் பண்பும் கலந்த தீப தேவதை பரிசு from your email and googled and learnt something new:http://aanmikam.blogspot.com/2011_10_01_archive.html...  You should blog...
·         Sar super as usual. Devathai should come any day not only marunal of thai. I like the way you say    தேவதையின் சிறப்பான அன்பால் -தேவா உன்னை மனிதன் உணர்ந்தான் ! Penmai is a very important aspect of all our lives whether we are men or women.  It is very subtle but very powerful.
·         தங்கள் வாழ்த்துக்கு நன்றி.உங்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கிறோம்
·         வணக்கம் - வாழ்த்துக்கள்
·         anda deepa devadhai ungal illathil deebathai ethi vittu aaangirundu gilambi valam vara arambithu vitthal. anda deepa oli ungal illathai mannakka, olikka vaikattum.
·         MIKKA NANRI,ARUMAIYANA PAADAL
·         Thank you Pulavar Ganasan Sir.Sontha Sarakku is a High Quality Sarakku.
·         உங்கள் வாழ்த்துக்களில் புதுமை !
நினைவுகளில் இனிமை !
எண்ணங்களில் தூய்மை !
நன்றியுடன்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்


No comments:

Post a Comment

value your views